அரசாங்கத்தின் அதிரடி முடிவு - இனி 'TIN' இன்றி இந்தச் சேவைகளைப் பெற முடியாது

 உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், பொதுமக்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பல முக்கிய பணிகளுக்கு TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது இனி கட்டாயமானதாகும்.


இதன்படி, பின்வரும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது இந்தச் சான்றிதழ் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


01. ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் புதிய வங்கிக் கணக்கை ஆரம்பித்தல்.

02. கட்டிட வரைபடங்களுக்கான (Building Plan) அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல்.

03. மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை (Revenue License) புதுப்பித்தல்.

04. காணி அல்லது காணி ஒன்றின் உரிமத்தைப் பதிவு செய்தல்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக இனிவரும் காலங்களில் பொதுமக்கள் தமது TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post