தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இதனடிப்படையில் நடைபெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை பு.டனுசிகா 2.60 மீற்றர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார்.