பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட வசதியை அபிவிருத்தி செய்வதற்காக நாடு முழுவதும்
உள்ள அரச பல்கலைக்கழகங்களில் 55புதிய விடுதிகளை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உயர்கல்வி பிரிவு குறிப்பிட்டுள்ளது. இத்திட்டம் 3 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்காகவும் நடைமுறைப்படுத்தப்படும் தற்போதைய முன்னேற்றங்கள் பின்வருமாறு:
- கிழக்குப் பல்கலைக்கழகம்
கிடைக்கபெற்ற மொத்த திட்டங்களின் எண்ணிக்கை : ஐந்து புதிய விடுதிகளுக்கான திட்டங்கள் .
விடுதி வகை : Model A ( மாணவர்கள் 400) வகையிலான மூன்று விடுதிகள் மற்றும் Model B (மாணவர்கள் 200) வகையிலான இரண்டு விடுதிகள்.
வசதிகள் கிடைக்கப்பெறும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை : 1,600 பல்கலைக்கழக மாணவர்கள்
தற்போதைய முன்னேற்றம் : ஒரு விடுதி அமைப்பதற்கான விலை கோரப்பட்டுள்ளது (Bids) 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளதுடன், போதும் தகைமை பெற்றுள்ள நிறுவனத்தை தெரிவுசெய்யும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2. யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
கிடைக்கப்பெறும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை: 02 விடுதித் திட்டம்.
விடுதியின் வகை Model A ( 400 மாணவர்கள்) வகையிலான 01 மற்றும் Model B (மாணவர்கள் 200) வகையிலான 01 விடுதி 01.
வசதிகளை பெற்றுக்கொள்ளும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 600.
தற்போதைய முன்னேற்றம்: ஒரு விடுகத நிர்மாணிப்பதற்கு பெறுகை விலை 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தினால் அந்த யோசனை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன
3. சப்ரகமுவ பல்கலைக்கழகம்
கிடைக்கப்பெறும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை: 07 விடுதித் திட்டம்.
விடுதியின் வகை: Model A (மாணவர்கள் 400) வகையான 04 விடுதிகள் மற்றும் Model B (மாணவர்கள் 200) வகையில் 03 விடுதிகள்.
வசதிகளை பெற்றுக்கொள்ளும் மொத்த பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை 2,200.
இப்போதைய முன்னேற்றம்: ஒரு விடுதியை நிர்மாணிப்பதற்காக பெறுகை விலை கோரல் 2026 மே 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன