சீரற்ற வானிலையால் 16ற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து 16ற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 16 பிரதான மற்றும் 10 நடுத்தர நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெதுறு ஓயாவின் 4 வான்கதவுகளும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்
Previous Post Next Post