பொதுவான வானிலை முன்னறிவிப்பு



2025  டிசம்பர் 02ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 டிசம்பர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மலையோ பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென்மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையில் பணிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Previous Post Next Post