தொலைதூரத்திலிருந்து ரோபோ மூலம் சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை



தொலைதூரத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி கனடிய மருத்துவர்கள் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். 
 
டொராண்டோவின் புனித மைக்கல்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழு இந்த சாதனையை படைத்துள்ளது. 
 
ரோபோக்களை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி சுமார் 10 மூளை அஞ்சியோகிராம் சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இது மருத்துவத்துறையில் ஒரு புதிய உலக சாதனை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்த சாதனை எதிர்காலத்தில் தூர பகுதிகளில் இருக்கும் நோயாளிகளுக்கு அவசர பக்கவாத சிகிச்சையை உடனடியாக மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 
 
மூளை அஞ்சியோகிராம் என்பது மிகக் குறைந்த துளையீட்டுக்குரிய சிகிச்சை முறையாகும். 
 
மருத்துவர்கள் முன்புறத்திலிருந்து (groin) femoral artery யில் கத்தீட்டரை நுழைத்து அதை இரத்த நாளங்கள் வழியாக மூளைக்குச் செலுத்துகின்றனர். 
 
பின்னர் கொன்ஸ்ட்ராட் டை contrast dye ஊற்றி எக்ஸ் கதிர் மூலம் இரத்த நாளங்களில் பிரச்சினைகள் உள்ளதா என்பதை கண்டறிகின்றனர்.
 
ஆனால் இத்திட்டத்தில் மருத்துவர் விடொர் மென்டாஸ் பெரய்ரா என்பவர் தொலை தூரத்தில் இருந்தவாறே ஒரு கணினி மூலம் ரோபோவை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தி இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post