கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன் துறை வரை பயணிக்கும் புகையிரத சேவை நாளை (28) முதல் மீண்டும் ஆரம்பம்



மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை நாளை 2024.10.28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி புகையிரதப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) என். ஜே. இந்திபொலகே விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அந்தப் புகையிரத நேர அட்டவணை பின்வருமாறு..
Previous Post Next Post