இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவு



”2024 ஆம் ஆண்டுக்கான தமிழ், சிங்கள மொழி அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணை தனியார் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (16) வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளை,மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மேற்படி பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post