மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் கடந்த 02.06.2024 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இடையேயான இப்போட்டியில் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டிகள் அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் அரம்பமாகி மாலை 8.30 மணியளவில் நிறைவு பெற்றது.
சதுரங்கப் போட்டியில் மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அணி 02 தங்கம், 01 வெள்ளி பதக்கங்கள் பெற்று 1ம் இடத்தையும், மன்னார் மாவட்ட அணி 01 தங்கம், 02 வெள்ளி பதக்கங்கள் பெற்று 2 ம் இடத்தையும் கிளிநொச்சி மாவட்ட அணியினர் 02 வெண்கலப் பதக்கங்கள்பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
கரம் போட்டியில் மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அணி 03 தங்கம், பதக்கங்கள் பெற்று 1ம் இடத்தையும், வவுனியா மாவட்ட அணி 01 வெள்ளி மற்றும் 07 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 2 ம் இடத்தையும் கிளிநொச்சி மாவட்ட அணி 01 வெள்ளி மற்றும் 01 வெண்கலப் பதக்கங்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்ட ஆண் பெண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்ககங்கள் பெற்ற போட்டியாளர்கள் எதிர்வரும் 26.06.2024 ஆம் திகதி தொடக்கம் 30.06.2024 ஆம் திகதி வரை கொழும்புவில் ரொறிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழா போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் கரம் போட்டியில் கலந்து கொண்ட ஆண் பெண் போட்டியாளர்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்ககங்கள் பெற்ற போட்டியாளர்கள் எதிர்வரும் 14.06.2024 ஆம் 15.06.2024 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 48 வது தேசிய விளையாட்டு விழா போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.