உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு!!



உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிதேச கடற்கரை பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நாடு பூராகவுமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் இப்பிரதேசத்திற்கான சுற்றாடல் சார் நிகழ்சித்திட்டங்களான சிரமதானம், மரநடுகை, விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் விசேட செயற்றிட்டங்கள் இவ்வாரம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன.

இதனடிப்படையில் (05) காத்தான்குடி கடற்கரைப் பகுதியை சிரமதானம் மூலம் சுத்தம் செய்யும் நிகழ்வு அதிகாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு கடற்கரையினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் 167ஏ, 167பீ, 167சீ ஆகிய கிரம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கும் கடற்கரைப் பகுதி உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் உள்ளுர் சுற்றுளாப் பயணிகள் பலரும் அதிகமாக வருகைதரும் இடங்களாகும். இப்பகுதியில் காணப்படும் பொலித்தீன், கடதாசி, உணவுக் கழிவுகள் வெவ்வேறாக அகற்றப்பட்டதுடன் கடல் அலைகளினால் ஒதுங்கும் கழிவுகளும் முறையாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post