கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து விவசாயத் துறையில் முன்னேற்றத்துக்காக செயற்படுவதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார்.
விவசாயத் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாக நேற்று (09) ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
“இலங்கையின் விவசாயத்துறையில் பணியாற்றுகின்ற பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. நாம் அன்று தொட்டு தனியாகவே தான் விவசாயத் துறையில் பணியாற்றியுள்ளோம். நாம் கண்கூடாகக் கண்டது எம்மோடு இணைந்து இந்தப் பயணத்தில் முடியுமாயின் நீண்ட தூரம் செல்ல முடியும் தொடர்ந்து விவசாயத் துறைக்காக பல வேலைகளை செய்து கொள்ளலாம். அதனால் விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் ஆரியன ஒன்றிணைந்து கலந்துரையாடி எதிர்காலத்தில் இரண்டு திணைக்களங்களும் ஒன்றிணைந்து ஒரே முறையில் ஒத்துழைப்புடன் சேவையாற்றுவதாக இணைக்கப்பட்டிற்கு வந்தனர்.
இத்துடன் இரண்டு நிறுவனங்களையும் முன்னேற்றுவதற்காக அதிகமாக பணியாற்ற வேண்டியுள்ளது. கீழ் மட்டத்தில் இருந்து எமக்கு பெரிய எண்ணிக்கையானவர்கள் பங்கு பற்றுநர்கள். உத்தியோகத்தர்கள் உள்ளார்கள் "எதிர்காலத்தில் இலங்கையில் விவசாய வளர்ச்சிக்கு ஒரே குறிக்கோளுடனும் உறுதியுடனும் நாங்கள் பணியாற்றுவோம். எங்கள் இரு நிறுவனங்களையும் ஒன்றாக ஒரு பயணத்தில் அழைத்துச் செல்வதே எங்கள் பயிற்சி.”
விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்கவும் இந்த திட்டம் குறித்து இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்தார்.