அனைத்து வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ள ஒட்டிகளை (ஸ்ரிக்கர்) அகற்றுதல்..


2024 ஜனாதிபதித் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்டிருப்பதனால், தேர்தல் சட்டவிதிகளை மீறும் வகையில் தனியார் பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில், கட்சிகளுக்கு அல்லது வேட்பாளர்களுக்கு ஆதரவு காட்டும் நோக்குடன், வாசகங்கள், சின்னங்கள், புகைப்படங்கள் அடங்கிய ஒட்டிகள் (ஸ்ரிக்கர்), கொடிகள் முதலியவற்றை காட்சிப்பட்டுள்ளமை தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயல் என்றும், அவற்றை உடனடியாக அகற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை...

Previous Post Next Post