பிலிப்பைன்ஸ் படகுகள் மீது சீன கப்பல் நீர்த்தாரை பிரயோகம்

 


தென் சீன கடலில் பிலிப்பைன்ஸ் கடற்றொழில் படகுகள் மீது சீன கடற்படை கப்பல் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.


பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுமே தென் சீன கடலின் மணல்திட்டு ஒன்றை உரிமை கொண்டாடி வரும் நிலையில் சீன கடற்படையுடன் சீன ஆயுதக் குழுவினரும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் கப்பல்களை விரட்டியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆபத்தான செயல்


சீனாவின் இந்தச் செயல் மிகவும் ஆபத்தானது என்று பிலிப்பைன்ஸும், அதன் நட்பு நாடான அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளன.


தென் சீன கடல் பகுதி முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயன்று வரும் நிலையில் இந்த செயற்பாடானது சா்வதேச கடல் வழித்தட உரிமையைப் பறிப்பதாக அமெரிக்கா கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post