30 ஆண்டுகளின் பின் கிட்டிய அதிர்ஷ்டம்: மில்லியன் டொலர்களை பரிசாக வென்ற தொழிலாளி

 


கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வாழும் தொழிலாளி ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் ஐந்து மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளார்.


கட்டுமானப் பணியாளரான ரபால் மேசா வால்டெஸ் என்பவருக்கே இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.


இதன் போது லோட்டோ 6/49 கிளாசிக் லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டொலர்களை இவர் பரிசாக வென்றுள்ளார்.


சீட்டிழுப்பின் வெற்றி


கடந்த 30 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிழுப்பில் பங்கேற்று வந்த இவர், வழமைப் போல அண்மைய சீட்டிழுப்பின் வெற்றி இலக்கங்களைப் பரீட்சித்தபோது அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


அதிர்ச்சியில் தனது வெற்றியிலகங்கள் சரியானவையா என வேறு ஒருவரின் உதவியுடன் அதனை சரி பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் தனது மனைவியிடம் லொத்தர் சீட்டு வெற்றி குறித்து குறிப்பிட்டபோது அவர் அதனை நம்பவில்லை எனவும் கூறியுள்ளார்.


இந்த வெற்றித் தொகையைப் பயன்படுத்தி ரொறன்ரோவில் வீடு ஒன்றைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post