உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி டெல்லி - அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (06.11.2023) 2 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.
பங்களாதேஷ் அணி
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
மேலும், இலங்கை அணி பங்குபற்றும் போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை அணி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாகக் குழு தலைவராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.