இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்

 

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி அவரது 77வது வயதில் காலமான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக பிஷன் சிங் பேடி கருதப்படுகின்றார்.


1966ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிய பிஷன் சிங் பேடி, 1979ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார்.


சர்வதேச கிரிக்கெட் போட்டி


இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


1971ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றமைக்கு முக்கியமான காரணமானவராக பிஷன் சிங் கருதப்படுகின்றார்.


அப்போதைய இந்திய அணி தலைவர் அஜித் வடேகர் காயம் காரணமாக வெளியேறியதால், இந்திய அணியின் தலைவராக பிஷன் சிங் பேடி செயல்பட்டுள்ளார்.


இவரது தலைமைத்துவத்தில் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் உச்சம் தொட்டது என விளையாட்டு ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இந்திய அணியில் தலைமைத்துவம்


இதன்படி இந்திய அணி தனது முதல் ஒருநாள் வெற்றியை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 1975 உலகக்கோப்பை தொடரில் பெற்றது.


இதன் மூலமாக முதல்தர கிரிக்கெட்டில் 370 போட்டிகளில் விளையாடிய இவர் 1,560 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


அதேபோல் டெல்லி அணிக்கு தலைவராக இருந்து இரு முறை ரஞ்சி கிண்ண தொடரில் கோப்பையை வென்றுள்ளார்.

Previous Post Next Post