அனலைதீவில் கற்களை ஏற்றி சென்ற கப்பல் பகுதியளவில் கடலில் மூழ்கியது

 

அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடலில் பகுதியளவில் மூழ்கியுள்ளது.


ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து அனலைதீவுக்கு சென்ற கப்பல் ஒன்றே நேற்று(06.08.2023) கடலில் பகுதியளவில் மூழ்கியுள்ளது.


கப்பலை மீட்பதற்கான பணிகள்



இதன்போது கப்பலில் வேலை செய்யும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதேவேளை வேறு எவருக்கும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் கப்பலை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post