மாணவியை கொடூரமாக தாக்கிய அதிபருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 யாழில் 9 வயது பாடசாலை மாணவியை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் யாழ் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 

9 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று (17.07.2023) முன்னிலைப்படுத்தப்பட்ட போது  நிதானமிழந்து மாணவியை தாறுமாறாக அடித்ததாக  அதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 


 20 தடவைகள் தாக்கியதாக அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு 

எஸ்லோன் பைப்பினால் மாணவியை 20 தடவைகள் தாக்கியதாக அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனுக்காக மேலதிக வகுப்பு நடத்தியாகவும், அப்போது ஒரே விடயத்தை 3 தடவைக் கூறியும் தவறிழைத்ததால், நிதானமிழந்து மாணவியை தாக்கியதாகவும்  நீதிமன்றத்தில் அதிபர் தெரிவித்துள்ளார்.

நிதானமிழப்பதும் ஒரு வகை  மனநோயே, இதற்கு உளவள சிகிச்சை பெற வேண்டுமென அறிவுறுத்திய நீதவான், 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் அதிபரை விடுவித்து, வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார். 

இதேவேளை, இந்த பாடசாலையில் கல்வி கற்கும் ஏனைய 9 மாணவிகளுக்கும் அதிபர்  இவ்வாறு அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post