யாழ். பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் மனதை உருக்கும் சம்பவம்! கண்ணீருடன் பட்டத்தை வாங்கிய தாய்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவர் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராவார்.
எனினும் அவர் உயிருடன் இல்லாததால் இன்று (20.07.2023) இடம்பெற்ற 37ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில், அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் மனதையும் உருகச் செய்துள்ள நிலையில், குறித்த பட்டத்தை தாய் கண்ணீருடன் பெற்றுக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post