நாட்டில் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. 

கடந்த 2021ம் ஆண்டில் 225,492 பேர் குடும்ப திட்டமிடலுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் சுமார் 29993 பேர் குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைகளுக்கு உட்பட்டுள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் குடும்பத் திட்டமிடலுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 96963 எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப கட்டுப்பாட்டு சக்திரசிகிச்சை

ஒன்பது ஆண்டுகளின் பின்னர் கடந்த 2021ம் ஆண்டில் குடும்ப கட்டுப்பாட்டு சக்திரசிகிச்சைகள் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது.

மாத்திரைகள், ஊசிகள் மற்றும் லூப் முறைமை உள்ளிட்ட சில வழிகளில் பெண்கள் குடும்ப கட்டுப்பாட்டு முறைமைகளை பின்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.


Previous Post Next Post