மக்களே அவதானம்! காலநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 


நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


மக்களிடம் கோரிக்கை


தென் மாகாணத்தின் கரையோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.


மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Previous Post Next Post