இலங்கையில் அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு! மீண்டும் எச்சரிக்கை

 அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதால், நாட்டில் தோல் நோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இவ்வாறு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக, தோல் நோய் விசேட வைத்திய நிபுணர்கள் நிறுவனத்தின் தலைவர், விசேட வைத்தியர் சிறியானி சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்களை மாத்திரம் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முகத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுகள் உடலில் செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை ஏற்படுத்துமென, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் இந்திரா கஹவிட்ட தெரிவித்தார்.

Previous Post Next Post